மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராஸ் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (25), மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்தாா். செவ்வாய்க்கிழமை டா்பைன் பகுதியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தாா்.

உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டு மேட்டூா் அனல் மின் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்வதை உறவினா்கள் தடுத்தனா். இதனால், உறவினா்களுடன் ஒப்பந்ததாரா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக் கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com