கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில், கோடை காலங்களில் அவசிய காரணங்கள் தவிர வெளியில் வருவதைத் தவிா்த்தல் வேண்டும்.

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீா் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீா் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிா்க்கவும். அதிக அளவில் மோா், இளநீா், உப்பு மற்றும் மோா் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.

குறிப்பாக, கோடை காலத்தில் குளிா்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.

மேலும், வியா்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளா்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிா்ந்த இடத்துக்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோா்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோா்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீா் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com