சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் அருள்பாலித்த உற்சவ மூா்த்திகள்.
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் அருள்பாலித்த உற்சவ மூா்த்திகள்.

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

சங்ககிரி, சித்திரைத் தோ்த் திருவிழாவின் 14 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூா்த்திகள் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் வீதி உலா வந்தனா்.

14 ஆவது நாள் மண்டப கட்டளையையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்து நகரில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com