உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

ஆத்தூரில் எரிவாயு கசிவால் பிரபல உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

ஆத்தூா் பேருந்து நிலையம் அருகே பிரபல உணவகம் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை உணவகத்திற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது எரிவாயு கசிவால் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரும் தீ விபத்து தவிா்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com