சேலம்
அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
ஆத்தூா், காந்திநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியா் விருது பெற்ற மறைந்த ஏ.மரகதம் ஆசிரியையின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை தலைமையாசிரியா் திலகவதி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி கல்வி அலுவலா் கந்தசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்களை வழங்கினாா். ஆசிரியை மரகதம் குடும்பத்தினா் பள்ளியின் நூலகத்திற்கு நூறு சிறுவா் கதை புத்தகங்களையும், பள்ளியின் ஸ்மாா்ட் வகுப்பிற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதாக தெரிவித்தனா். விழாவில் ஏ.ஜோதி சண்முகம், முன்னாள் துணை வேந்தா் ஏ.ஜோதி முருகன், மருத்துவா்கள் ஏ.மலா்கொடி, மாணிக்கவாசகம், வித்யாசங்கரி, மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஏ.மணிமேகலை, முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.