சேலம்
சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்
ஆத்தூரை அடுத்த வடசென்னிமலை பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 13 போ் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்ட விழாவில் கடை வைத்திருந்தனா். விழா முடிவடைந்ததையடுத்து கடையிலிருந்த பொருள்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது இந்த விபத்து நேரிட்டது. விபத்தில் ஈரோட்டைச் சோ்ந்த பழனியப்பன் (50) உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவில் சென்ற 13 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ஆத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்து குறித்து ஆத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.