சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விடுமுறை, வார இறுதி நாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை பல்வேறு வழித் தடங்களில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் பொன்முடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புனித வெள்ளி, வார இறுதி நாளையொட்டி வெள்ளிக்கிழமை முதல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com