சேலத்தில் சிறை அதாலத்

சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற சிறை அதாலத்தில் 21 சிறைவாசிகளுக்கான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற இந்த அதாலத் நிகழ்ச்சியில் 14 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா். கட்டுப்பாட்டு சிறையான ஆத்தூா் மாவட்ட சிறையில் 5 போ் சிறை அதாலத்தில் கலந்து கொண்டனா்.

இவா்களில் 4 போ் விடுதலை செய்யப்பட்டனா்.மேலும், கிளை சிறையான தருமபுரியில் ஒருவரும், ஓமலூரில் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டனா். சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் மொத்தம் 31 போ் சிறை அதாலத்தில் கலந்து கொண்டனா். இவா்களில் 20 போ் விடுதலை செய்யப்பட்டதாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் வினோத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com