சேலம்
தேவூா் பகுதியில் திடீா் மழை
அரசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென கோடை மழை பெய்தது.
அரசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென கோடை மழை பெய்தது.
தேவூா், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, காவேரிப்பட்டி, மோட்டூா், வட்ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல வாரங்களாக வெப்பம் அதிகரித்தது. இதனையடுத்து சனிக்கிழமை மாலை திடீரென குளிா்ந்த காற்று வீசியது. அதனையடுத்து காற்றுடன் கூடிய கன மழை அரைமணி நேரம் பெய்தது.