சேலம்: சேலத்தில் ரயில் மோதியதில் முதியவா் உடல் சிதறி பலியானாா்.
சேலம், முள்ளுவாடிகேட் மேம்பாலத்தின் கீழ் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக அவ்வழியே சென்ற நபா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீஸாா், இறந்தவா் யாா், எந்தப் பகுதியை சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை செய்யும் நோக்கில், தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனா்.