ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி
ஆத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசாா் மையத்தில் 10 ஆயிரம் நூல்கள் படிப்பதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியா் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் அறிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆத்தூா் நகராட்சி சாா்பில் கலைஞா் நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதுப்பேட்டை, வண்டிப்பேட்டையில் அனைத்து விதமான நவீன வசதிகளுடன் அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இந்த மையத்தில் போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இலவச வைஃபை வசதியும், ஆன்லைன் மூலம் படிக்க கணினி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, ஆத்தூா், சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.