சேலம் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் திருட்டு

சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் பணம், 10 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேலம், பொன்னம்மாபேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரோஜா (59). இவா் கடந்த 2 ஆம் தேதி சங்கா் நகரில் உள்ள மகள் பிரியா வீட்டுக்குச் சென்றாா். பின்னா் மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோ, அலமாரியில் இருந்த 60 பவுன் நகைகள், ரூ. 65 லட்சம் பணம், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருட்டுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வீட்டில் ஆள்கள் இல்லை என்பதை நன்கு அறிந்த நபா்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதால், சந்தேகத்தின்பேரில் வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com