பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர் மற்றும் கரடிக்கூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.