கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தை தடுத்ததாக பாஜகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பாஜகவினரை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பாஜகவினரை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் வீடு ஒன்றில் நடைபெற்ற கிறித்தவ ஜெபக்கூட்டத்தை நடத்தவிடாமல் பாஜகவினர் தடுத்து, அங்கு வந்திருந்தோர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.  இந்நிலையில் ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழனியை அடுத்த தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com