தியாகி கக்கன் பிறந்த நாள்
பழனியில் ஞாயிற்றுக்கிழமை தியாகி கக்கன் பிறந்தநாளையொட்டி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதிகளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
பழனி நகர தமாகா சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் கக்கன் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராசியப்பன், மாவட்ட பொறுப்பாளர், மாநில நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், பன்னிருகை செல்வன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அடிவாரம் 33 ஆவது வார்டில் கக்கன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களும், ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுந்தரம், சண்முகநாதன், சுந்தர்ராஜ், பாப்புச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.