பழனியில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் திட்டத்தின் கீழ் உர விற்பனையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விற்பனை முனை கருவிகள் வழங்கப்பட்டன.
பழனி வேளாண் விற்பனை நிலையத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் வட்டார தனியார் உர மையங்களுக்கு விற்பனை முனை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருவியினை பழனி வேளாண்மை உதவி இயக்குநர் சுருளியப்பன் உரவிற்பனையாளர்களுக்கு வழங்கி பயிற்சி அளித்தார். திண்டுக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ரவிச்சந்திரன் கருவியின் பயன்பாடு பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் 3 வட்டாரங்களைச் சேரந்த 65 உர விற்பனையாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள் மீனாகுமாரி, கீதா, மோகன், முத்துக்குமார் உள்ளிட்டோர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.