கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பல்கலைக் கழக மாணவிகளுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் கு.வள்ளி தலைமை வகித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் தனித் துணை ஆட்சியர் இந்திரவள்ளி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.
முன்னதாக பேராசிரியர் நந்தினி வரவேற்றார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் தாமரைச்செல்வி தொகுத்து வழங்கினார். பல்கலைக் கழக கல்லூரி முதல்வர் ஜெபராணி நன்றி கூறினார்.