காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த, குருவாயூர் விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர், மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மறித்தனர்.
ரயிலின் மீது ஏறி நின்று கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். மறியல் தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீஸார் 60 பேரை கைது செய்தனர்.