கோபால்பட்டி அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியை அடுத்த ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (25). கூலித் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கோபால்பட்டிக்கு வந்துவிட்டு, ஒத்தக்கடைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல் - நத்தம் சாலையில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, நிலை தடுமாறி அருகிலிருந்த புளிய மரத்தின் மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.