கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதை அடுத்து, வெள்ளிக்கிழமை வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வத்தலகுண்டு கொடைக்கானல் மலைச்சாலை செல்லும் வழியில், புலிச்சோலை, மச்சூர், ஊத்து, வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் "கஜா' புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனையடுத்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மலைச்சாலையில் வாகன போக்குவரத்துக்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலைச் சாலை(காட் ரோடு) தொடங்கும் கெங்குவார்பட்டியிலுள்ள வனத்துறை சோதனைச் சாவடியிலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.