பழனியில் புதன்கிழமை, மொபட் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் தோட்டக் காவலாளி உயிரிழந்தார்.
பழனி முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (70). தனியார் தோட்டக் காவலாளி. இவர் புதன்கிழமை காலை வேலையை முடித்து விட்டு மொபட்டில் பழனி வந்த போது பின்னே அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிளை பழனி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது தவ்பீக்(17) ஓட்டி வர, அதில் இவர் உள்பட 3 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் அந்த மூன்று பேருமே காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.