வேடசந்தூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேடசந்தூர் பேரூராட்சி செயலர் இரா. கோபிநாத் தெரிவித்துள்ளதாவது: வேடசந்தூர் கோவிலூர் சாலையில் நீதிமன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வேடசந்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை, இந்த வாரம் மட்டும் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.