பைக்- வேன் மோதல்: கூலித் தொழிலாளி பலி

பழனி- உடுமலை சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனமும், வேனும் மோதிக் கொண்டதில் கூலித் தொழிலாளி பலியானார்.


பழனி- உடுமலை சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனமும், வேனும் மோதிக் கொண்டதில் கூலித் தொழிலாளி பலியானார்.
பழனி சாமி தியேட்டர் 13ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதமுத்து (41), காளியப்பன் (31),  மாரிமுத்து (35) இவர்கள் மூன்று பேரும் கூலித்தொழிலாளர்கள் என்பதுடன், நண்பர்களும் ஆவர்.  இவர்கள் மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் உடுமலை சென்று விட்டு மாலையில் பழனிக்கு திரும்பியுள்ளனர். 
பழனி-உடுமலை சாலையில் வந்த போது எதிரே வந்த காருடன் மோதியதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.  இதையடுத்து மூன்று பேரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு மருதமுத்து உயிரிழந்தார். விபத்து குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com