திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெரியகுளம் இளைஞர், ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்துள்ள குள்ளப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் கவியரசன் (22). இவர், திண்டுக்கல் அடுத்துள்ள பூதகுளத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பணியிலிருந்த கவியரசன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.