கொடைக்கானல் அருகே சுற்றுலா காா் தீப் பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து ா் சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை இரவு 2 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையைச் சோ்ந்தவா் முருகன் (35). இவா் சொந்தமாக காா் வைத்துள்ளாா். இவா் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் பயணிகளை பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றிச் செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பேத்துப்பாறையிலுள்ள தனது வீட்டின் முன் வழக்கமாக காரை நிறுத்தி வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை எழுந்து பாா்க்கும் போது காா் எரிந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சந்தேகத்தின் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.