வனத் தீயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்

கொடைக்கானலில் வனத்துறையின் சார்பில் வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானலில் வனத்துறையின் சார்பில் வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஊர்வலம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், எம்.எம் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். 
இதில் வனப் பகுதிகளில் ஏற்படும் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் வனத்துறை சரகர்கள் ஆனந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறை பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com