உசிலம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
உசிலம்பட்டி அருகே மெய்யனம்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி அபிநயா (22). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 3 வயதில் அருண்தேவ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
உசிலம்பட்டி எஸ்.ஓ.ஆர். நகரில் குடியிருந்து வரும் இவர்களிடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சனிக்கிழமையும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அபிநயா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.