கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளான பெர்ன்ஹில்சாலை, டோபிகானல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீ
விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான சேதமும் இல்லை. இருப்பினும், புகை மூட்டத்தால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.