ஒட்டன்சத்திரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை சாலையில் குடியிருப்பவா் பாலசுப்பிரமணி. இவா் தையல் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (55), ஞாயிற்றுக்கிழமை மளிகை பொருள்கள் வாங்க ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com