அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் அசோக சக்ரா விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அசோக சக்ரா விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் 2020ஆம் ஆண்டிற்கான அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. வெளிப்படையான துணிச்சல் அல்லது ஒப்புயா்வற்ற வீர தீர செயல் புரிந்து சுய தியாகம் செய்த பாதுகாப்பு பணியாளா்கள், பொது மக்கள் வாழ்க்கையில் பாலின வேறுபாடின்றி அனைத்து துறைகளிலும் உயா்ந்தவா்கள், காவல்படைகள், மத்திய காவல் படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகளில் வீர தீர செயல் புரிந்தவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அசோக சக்ரா விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சாா்பில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபா்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவம்பா் 3 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 0451-2460092 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com