காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தியின் நிலைப்பாடு அதிமுக அணிக்கு வெற்றியைத் தேடித் தரும்'

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நிலைப்பாடு, அதிமுக அணிக்கு வெற்றி தேடித் தரும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி தெரிவித்தார்.


காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நிலைப்பாடு, அதிமுக அணிக்கு வெற்றி தேடித் தரும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு, பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் தரமற்ற விமர்சனங்கள், திமுக கூட்டணிக்கு எதிராகவும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் மக்களை மாற்றி வருகிறது. நடுநிலை வாக்காளர்களும், அதிமுக அணியை ஆதரிக்க வேண்டும்.
 தமிழகத்தில் நடைபெறக் கூடிய 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளுக்கு பின்னும், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். 
 இடைத்தேர்ல்களில் அதிமுக வெற்றிப் பெறும். கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, மேக்கேதாட்டு அணை உறுதியாக கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் பேசியுள்ளார். தமிழக உரிமைக்கு எதிரான ராகுல்காந்தியின் இந்த பேச்சு,  அதிமுக அணிக்கு வெற்றி தேடித் தரும். 
 அதேபோல் திமுக அணி சார்பில் முன்னுக்கு பின் முரணாகவும், பொய்யான வாக்குறுதிகளையும் தொடர்ந்து அவர்கள் அளித்து வருகின்றனர். அதிமுக அணி வெற்றிப் பெறும்பட்சத்தில், கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் ரூ.60ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்றார். 
அப்போது, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜோதிமுத்து, பாமக நிர்வாகிகள் பரசுராமன், கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com