கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு கோடை மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால், கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், மலைப் பகுதிகளில் காட்டுத் தீப்பிடித்து எரிந்தது. இந் நிலையில், கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில் பகலில் கடுமையான வெயிலும், மாலையில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.