வத்தலகுண்டு அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. 


திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. 
வத்தலகுண்டு அருகே செக்காபட்டியில் நடந்த இக் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா தலைமை வகித்தார்.  திட்டம் பற்றியும் ஆடுகள் வளர்க்கும் விதம் பற்றியும் கால்நடை மருத்துவர்கள் டாக்டர் ராம்குமார், சங்கரநாராயணன், பிரபு ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. மகளிர் திட்ட அதிகாரி சாந்தஷீலா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சின்னன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர்  வளர்மதி வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com