திண்டுக்கல் மாவட்டத்தின் சிஐடியு 10ஆவது மாநாடு பேரணியுடன் சனிக்கிழமை தொடங்கியது.
சிஐடியு சார்பில் திண்டுக்கல் மாவட்ட 10ஆவது மாநாடு சனி மற்றும் ஞாயிறு என 2 நாள்கள் நடைபெறுகிறது. திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு, பேரணியுடன் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக சங்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்து தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு ஜோதி புறப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு புதிய மாவட்ட குழு நிர்வாகி டி.ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு பங்கேற்று பேசினார்.
அதே நேரத்தில், ஆக்னீஸ்மேரி தெருவில் இருந்து கொடிப்பயணமும், மெங்கில்ஸ் சாலை ஏம்சி சாலை சந்திப்பிலிருந்து கொடிமரப்பயணம் தொடங்கியது.
பின்னர் நாகல் நகரிலிருந்து மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் மாநில செயலர் ஆறுமுகநயினார், மாநில துணைத்தலைவர் சந்திரன், மாவட்டச் செயலர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.