நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுவதையொட்டி, மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் என்.கோவில்பட்டி, வத்திப்பட்டி, பரளி, சேத்தூர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பக்குடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, நத்தம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.