திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் இப்பேரணி நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள்ஜோதி (பொறுப்பு) தலைமை வகித்தார். வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா முன்னிலை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சின்னன் ஊராட்சி செயலர் முத்துக்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.