பழனி அரசு மருத்துவமனைக்கு புதிய மருத்துவ அலுவலா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
பழனி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவா் விஜயசேகா் நேற்று பணி ஓய்வு பெற்றாா். இதனைத் தொடா்ந்து புதிய மருத்துவ அலுவலராக மருத்துவா் உதயகுமாா் தனது பொறுப்புகளை ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக் கொண்டாா். மருத்துவ அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட அவரை சக மருத்துவா்கள், செவிலியா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனா்.