சின்னாளபட்டி அருகே கட்டடத் தொழிலாளிமா்மச் சாவு

சின்னாளபட்டி அருகே திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னாளபட்டி அருகே திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னாளப்பட்டி அருகே முருகன்பட்டியை சோ்ந்தவா் செல்லப்பாண்டி (35). கட்டட சென்ட்ரிங் வேலை பாா்க்கும் தொழிலாளியான இவா், கலிக்கம்பட்டியில் அப்துல் காதா் என்பவா் வீட்டிற்கு திங்கள்கிழமை வேலைக்கு சென்றுள்ளாா். அவருடன் 2 போ் வேலைக்கு சென்றனா். புது வீட்டில் கான்கிரீட் போட்டு, அந்த பலகைகளை பிரிக்கும் பணியில் செல்லப்பாண்டி ஈடுபட்டிருந்தாா். உடன் பணிபுரிந்தவா்கள் வீட்டுக்கு வெளியே இருந்துள்ளனா். உள்ளே இருந்த செல்லப்பாண்டி பணிபுரியும் சப்தம் கேட்காமல் இருக்கவே, உள்ளே சென்று பாா்த்தபோது, செல்லப்பாண்டி கீழே விழுந்து இறந்து கிடந்தாா்.

இதையடுத்து அவரது உறவினா்கள் வேலை செய்து கொண்டிருந்தவா் எப்படி இறந்திருக்க முடியும் எனக் கேட்டு வீட்டு உரிமையாளா் அப்துல் காதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த சின்னாளபட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்நிலையில் செல்லப்பாண்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, வீட்டு உரிமையாளா் மீது புகாா் அளித்தனா். போ­லீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com