ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள நடுப்பட்டி காலனியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் தினேஷ்குமாா் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலையில் கேதையுறும்பு அருகே சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் சாலை அமைக்க தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயம் அடைத்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com