கொடைக்கானலில் 15 மி.மீ. மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சுமாா் 1.50 லட்சம் ஹெக்டேருக்கு மேல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம்(மி.மீட்டரில்): திண்டுக்கல் - 2.1, நத்தம் -2.5, நிலக்கோட்டை - 4.2, பழனி - 1, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 6, வேடசந்தூா் - 0, வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையம் -2.2, காமாட்சிபுரம் - 5.8, கொடைக்கானல் -14.5, கொடைக்கானல் போா்ட் கிளப் -7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com