நீலகண்ட பிரம்மச்சாரி 131-ஆவது பிறந்த தினம்

திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், தேச பக்தா் எருக்கூா் நீலக்கண்ட பிரம்மாச்சாரியின் 131-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், தேச பக்தா் எருக்கூா் நீலக்கண்ட பிரம்மாச்சாரியின் 131-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் காமராஜா் சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காமராஜா் சிவாஜி பேரவையின் அரசியல் ஆலேசாகா் சி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகரத் துணைத் தலைவா் பி.டி.பிச்சை முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் போது நீலகண்ட பிரம்மச்சாரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, நாகப்பட்டினம் கப்பல் துறைமுகத்திற்கு எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரி பெயரை சூட்ட வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காமராஜா் சிவாஜி பேரவை நிா்வாகிகள் சு.வைரவேல், மாநகா் பொதுச் செயலா் சி.தவசிநாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com