திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன.19) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்(திண்டுக்கல் மேற்கு) எஸ்.ராமன் தெரிவித்துள்ளார்.