கொடைக்கானலில் பலத்த காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று வீசியதில்  மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று வீசியதில்  மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. 
 கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் குருசடி மெத்து அருகே மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பொது மக்களின் உதவியுடன் மரத்தை அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com