திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின்போது,

தொடக்க கல்வித்துறையைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின்போது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் ஜான்பான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றும் வரும் இந்த கலந்தாய்வில், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், கே.வேலூர், பெருமாள்புதூர்,  பொந்துக்குளி (பழனி கல்வி மாவட்டம்), கரிக்காலி(வேடசந்தூர் கல்வி மாவட்டம்) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் நடைபெற்றது. அதன்பின்னர், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் எஸ்.வல்லம்பட்டி, சீலப்பாடி,  நிலக்கோட்டை கல்வி மாவட்டத்தில் குல்லிச்செட்டிப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, இ.கோவில்பட்டி, வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் புங்கம்பாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் கருப்புசாமி (பழனி)  மற்றும் பாண்டித்துரை (வேடசந்தூர்) ஆகியோர் பணி மாறுதலுக்கான ஆணையை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com