பழனி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழனி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமுக்கு, பழனி சார்-ஆட்சியர் தலைமை
வகிக்கிறார். முகாமில், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டங்களைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.