திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் வீர வாஞ்சிநாதன் 108ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் சித்தரஞ்சன்தாஸ் 94ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் தியாகி கக்கன் 112ஆவது பிறந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவுக்கு காமராஜர் சிவாஜி பேரவையின் நிறுவனர் சு.வைரவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜெய்ஹிந்த் செண்பகராமனின் பேரன் பொ.சேது சேஷன் கலந்து கொண்டு, முப்பெரும் தலைவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் காமராஜர் சிவாஜி பேரவை நிர்வாகிகள் க.ஆனந்தன், சி.சுப்பிரமணி, கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.