திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே திங்கள்கிழமை மழை வேண்டி யாகம் நடைபெற்றது.
செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை அருகே ஸ்ரீசக்தி நகரில், ஸ்ரீசர்வ சக்தி அம்மன் திருகோயில் உள்ளது. இங்கு தினமும் யாக வேள்வியும் ஆராதனை நிகழ்ச்சியும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மழை பெய்ய வேண்டி, பகவான் ஸ்ரீசர்வசக்தி சுவாமிகள் சிறப்பு மகா யாக பூஜை செய்தார்.
காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்ரீசர்வ சக்தி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.