கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தினர்.
கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களையும் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் சார்பில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும், சீல் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி அணிந்து, தொழுகையில் பங்கேற்றனர்.