வேடசந்தூர் அடுத்துள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (மே 2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, ஐயர்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூர், எஸ் சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூர், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.