மத்திய, மாநில ஆட்சிகள் தொடரும்'

மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதுள்ள ஆட்சி தொடரும் என புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏசி.சண்முகம் தெரிவித்தார்.


மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதுள்ள ஆட்சி தொடரும் என புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏசி.சண்முகம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை  அவர் கூறியதாவது: வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு  திமுக பொருளாளர் துரைமுருகனே காரணம். அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்  பதுக்கி வைத்திருந்த காரணத்தாலேயே தேர்தல் நிறுத்தப்பட்டது. 
மே 23-க்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின், துரைமுருகன் என திமுகவினர் பலரும் கனவு காண்கின்றனர். ஆனால், திமுகவினரின் கனவு, நனவாகாது. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதுள்ள ஆட்சி தேர்தலுக்கு பின்னும் தொடரும். வேலூரில் எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com